பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 15, 2012

வலி

பசிக்கு பால் இல்லை...
அழுகை...
பிஞ்சின் வலி!

நல்ல பழக்கங்கள்
பயில்விக்காதது..
தாய் தந்தைக்கு...
காலம் முழுதும் வலி!

பதில் இருந்தும்..
நேரமில்லை..
மாணவனின் வலி!

கனியிருக்க..
காய் கவர்வது..
வார்த்தையின் வலி!


புரியும்
மனமில்லை...
மோதலில் தொடங்கும்..
காதல்..
ஆயுள் வலி!

தன் கண்முன்னே...
அழியும் வளம்..
இயற்கையின் வலி!

குடியை கெடுக்கும்..
குடியின் வலி!



உயிர் பிரிந்தாலும்...
நினைவில் வாழும்..
மரண வலி!

இன்பத்திலும்..
துன்பம் எண்ணுவது..
தலைவலி!

தடைக்கல்..
மைல்கல்லாவது...
சாதனையின் வலி!

நூலைவிட..
மெலிதாய்...
தேகம் கரைவது...
வறுமையின் வலி!

கனவினை..
உயிர்பிப்பது..
உழைப்பின் வலி!


வலிகளை
தாங்கி..
வாழ்வதே..
நல்வழி!!!

2 comments:

  1. Nice lines karthi valkaya nalla anubavachu eluthurikinga very Nice

    ReplyDelete
  2. valihalai......thaangi...madindhu...veezhum naeram.....VIDHAYAI UN YEZHUTHUKAL...thulir vidum nambikai...nandri pala:)

    ReplyDelete