பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 22, 2010

என்னுயிரில்...






உலகறியாது..
உன்-

உள்ளம் அழகினை..
மலர் அறியாது..
பெண்வாச உணர்வினை!!




கண்களால்..
என்னை கண்டித்தாய்...
கைகளால்..
தீண்டி தண்டித்தாய்!!!
கனவிலே..
என்னை மிதக்கவிட்டாய்..
உன் நினைவிலே...
என்னை சிறைவைத்தாய்!!!
மாலையில்..
என்னை தவிக்கவிட்டாய்..
சோலையில்..
கவிதை படிக்கவிட்டாய்!!
காதலை..
என்னுள் விதைத்ததனால்..
உன்னை..
என்னுயிரில் ஊற்றிவிட்டாய்!!!
 


வானமாகிறேன்..
வானவில்லாய் மலர்ந்தாய்!!
நிலத்தில் மண்ணாகிறேன்..
என்மேல்..
 
மழைத்துளியாய் வீழ்ந்தாய்!!






சூரியனை சுற்றும்..
பூமியை போல்...
என்னை சுற்றிடும்..
உன் ஞாபகங்கள்..
ஞாபக மேகங்கள்..
கலைந்தாலும்..
வான்தாண்டி போகாது!!!
உன்னில் இருக்கும்..
என்னையும்..
என்னில் இருக்கும்..
உன்னையும்..
மீட்காதிருக்கும்..
ஒவ்வொரு நாளும்..
திருநாளாம்..
என் அன்பே!!! 


விழிகள் அழகுதான்..
காட்சிகள் தெரியும்வரை!!
வலிகள் சுகங்கள்தான்..
நீ-
என்னுடன் உள்ளவரை!!!
பறக்க எண்ணி..
வான் பார்த்தேன்..
சிறகுகளை அள்ளி..
 
நீ தந்தாய்...
மறக்க முடியாமல்..
நான் தவித்தேன்..
உனை மறந்த பின்னாலும்...
நீ வந்தாய்!!
உன்னை நான்..
நினைத்துவிட்டால்..
மறக்கின்றேன்..
என்னை நான்..
உன்னை நான்..
மறந்துவிட்டால்..
துறக்கின்றேன்..
என்னை நான்!!!

No comments:

Post a Comment