பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 26, 2010

எனக்கும் உன் மேல்..

தினம் தினம்.. 
என் முன் அமர்கிறாய்...
என் உயிரணு அழுத்தி..
உயிர்பிக்கிறாய்..
நான்-
கண் திறந்து பார்த்தால்..
உன் முகத்தில்..
ஒரு நாளும்..
நான் கண்டதில்லை.. 
மகிழ்ச்சி!
மாறாக..
உன் கண்களில் மிரட்சி!! 


நீ தெரியாமல் 
இழைக்கும்..
பிழைக்கும்...
என் தோழரிடம் பிறக்கும்..
குறைக்கும்..
எனக்கு புரியாத..
அரைவேர்க்காடு
அர்ச்சனை கூவி.. 
மொத்தமாக 
முகம் சுழிப்பாய்..
என்னிடமே!!!!
  
இல்லம் செல்கையில்...
என்மேல் சிறு- 
கரிசனம்கூட கொள்ளாமல்..
எனை-
உறங்க வைக்க..
மறந்துவிட்டு..
நில்லாமல்..
ஓடிவிடுவாய்!! 
விடியும் வரை...
விடியல்-
மலர்ந்த  பின்னும்..
உன்-
வருகைக்கு காத்திருந்து...
மீண்டும் உன்னிடமே..
சரணடைகிறேன்..
நாள்தோறும்!! 
  
இத்தனை தியாகங்களுக்கு இடையில்..
நீ பிறரிடம்...
பாடும் ஒப்பாரி..
என்னை கண்டால்...
உன்-
மல்லிகை கண்களுக்கு..
எரிச்சலாம்...
உன்னை கண்டு..
நானும் தினம்...
சூடாகிறேன்...
ஒரு கணம்..
நான் அயர்ந்திருப்பேனா? 

  
அனைத்திற்கும் மேல்..
நீ சந்தோசத்தில்..
திளைப்பாய்..
கார்த்திகைக்கு ஒருமுறை..
பௌர்ணமிக்கு ஒருமுறை!!
அன்று-
அனைவரையும்..
ஒன்றுகூட்டி...
வெற்றியை பகிர்வாய்.. 
என் அழகு முகத்தில்..
ஆள்காட்டும் விரல்வைத்து..
என்-
கண் குத்தி காட்டுவாய்..
எந்த லோகத்து நியாயமாடா? 

  
கணினி கற்ற மானிடா..
என்னை எப்படியெல்லாம்..
உன் கழுத்தை சாய்த்து..
திருப்பி பார்க்கிறாய்.. 
முறைக்கிறாய்..
உணவுண்டு விட்டு..
என்மேல்
உன் கெட்ட ஆவி ஊதி..
தூங்கி வழிகிறாய்..
மூக்கில் விரலைவிட்டு..
தூர் வாருகிறாய்...
எனக்கும் உன் மேல்.. 
வெறுப்படா..
பிடிக்கவில்லை..
உன்னையே தினமும்..
கண்டு ரசிக்க...
விடுதலை வேண்டுமென்று..
ஆண்டவனிடம்
முறையிட்டால்...
அவனிடமே-
பாவம் அங்கு..
ஏகப்பட்ட சர்ச்சை!!! 
  
உன்னை..
காரி உமிழ்ந்தால்கூட..
தொடைத்துவிட்டு..
சென்றுவிடுவாய்..
அதனால்தானடா..
என் குல மக்கள்..
இறுதியில் புகைந்துபோய்..
மடிகின்றார்!! 
உயிர் வாழும் உனக்காக..
உயிரற்ற என்போன்றோரை..
இனியும்..
அலட்சியம் செய்யாதிரு..
அற்பமானிடா!! 

மீண்டும் மலர்வேன்...

இறைவன்
 எனக்கருள்ந்த..
ஆயுள் தண்டனை..
'அம்மாஎன்று..
என்றும்..
என் வாய் மொழியாது!! 

எழுத்துக்கூட்டி..
தினம் தினம்..
மனதில் மட்டும்..
உன்னை நான் படித்தேன்..
'அம்மா'! 

தரையில்..
கண்ணயர்ந்தாலும்..
மூடிய விழி திறவாமல்..
உன் மடி தேடி..
தூக்கம் தொலைக்கும்! 

உச்சி முகர்ந்து..
என் நெற்றி தழுவி..
அன்பாய்..
என் கன்னத்தில்..
இதழ் பதித்தால்..
மிருகமாய் மடிவேன்..
மீண்டும்-
மழலையாய் மலர்வேன்!!

Oct 22, 2010

என்னுயிரில்...






உலகறியாது..
உன்-

உள்ளம் அழகினை..
மலர் அறியாது..
பெண்வாச உணர்வினை!!




கண்களால்..
என்னை கண்டித்தாய்...
கைகளால்..
தீண்டி தண்டித்தாய்!!!
கனவிலே..
என்னை மிதக்கவிட்டாய்..
உன் நினைவிலே...
என்னை சிறைவைத்தாய்!!!
மாலையில்..
என்னை தவிக்கவிட்டாய்..
சோலையில்..
கவிதை படிக்கவிட்டாய்!!
காதலை..
என்னுள் விதைத்ததனால்..
உன்னை..
என்னுயிரில் ஊற்றிவிட்டாய்!!!
 


வானமாகிறேன்..
வானவில்லாய் மலர்ந்தாய்!!
நிலத்தில் மண்ணாகிறேன்..
என்மேல்..
 
மழைத்துளியாய் வீழ்ந்தாய்!!






சூரியனை சுற்றும்..
பூமியை போல்...
என்னை சுற்றிடும்..
உன் ஞாபகங்கள்..
ஞாபக மேகங்கள்..
கலைந்தாலும்..
வான்தாண்டி போகாது!!!
உன்னில் இருக்கும்..
என்னையும்..
என்னில் இருக்கும்..
உன்னையும்..
மீட்காதிருக்கும்..
ஒவ்வொரு நாளும்..
திருநாளாம்..
என் அன்பே!!! 


விழிகள் அழகுதான்..
காட்சிகள் தெரியும்வரை!!
வலிகள் சுகங்கள்தான்..
நீ-
என்னுடன் உள்ளவரை!!!
பறக்க எண்ணி..
வான் பார்த்தேன்..
சிறகுகளை அள்ளி..
 
நீ தந்தாய்...
மறக்க முடியாமல்..
நான் தவித்தேன்..
உனை மறந்த பின்னாலும்...
நீ வந்தாய்!!
உன்னை நான்..
நினைத்துவிட்டால்..
மறக்கின்றேன்..
என்னை நான்..
உன்னை நான்..
மறந்துவிட்டால்..
துறக்கின்றேன்..
என்னை நான்!!!