பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 17, 2010

மலரும்...

சாதிகள் இல்லையடி பாப்பா...
நீ பிரியமாக பழகிட!!!
பள்ளிச்சான்றிதழில் தேவையடி பாப்பா..
நீ பாடங்கள் பயின்றிட!!!
விற்பனைக்கு பாப்பா இன்று-
வீணை மீட்டுக்கொண்டிருக்கும்..
உன் கல்விதேவி!!!
ஆயிரம் ஆயிரம் பணமாம் பாப்பா...
உனக்கு 'அ'னா மொழிந்திடும்..
இறைவனைக்காண!!!
மறந்திடாதே பாப்பா..
மகுடங்கள் ஏற்றிட...
மனதில் சில முற்கள் நெருடிடும்...
நெடுங்காலமாய்!!!
காலம் உண்டு பாப்பா...
ஓர் நாள் மலரும்..
முள்ளோடு..
மனங்களும்...
கல்வியை வியாபாரமாக்கும்...
மனிதமானிக்கங்களும்!!!

No comments:

Post a Comment