பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 16, 2010

அருவி



உண்மையில் நான் ஒரு அருவியடி..
எங்கு போகின்றோம் என்று தெரியாமல்..
அனைவருக்கும் சுவை நீர் வழங்கி..
மகிழ்த்துகிறேன்.. 
என்னை வருத்துகிறேன்!!
காகிதத்தில் செய்த கப்பலொன்றை..
என்னில் யாரோ விட்டுவிட்டார்..
ஓட்டை இருந்தது தெரியாமல்...
மூழ்கடிக்கவிட்டேன்..
என்னை தவிக்கவிட்டேன்!!
அருவி கடலோடு சேர்ந்தாலும்..
நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்..
அந்த நினைவுகளை வெளிப்படுத்த..
அலையாய் கடலில் பிரதிபலிக்கும்!!!

No comments:

Post a Comment