கவிதை எழுத தொடங்கிவிட்டால்...
உந்தன் ஞாபகம் வருகிறது..
உந்தன் ஞாபகம் வந்துவிட்டால்..
கவிதைகள் தன்னால் வருகிறது!!
உந்தன் முகமே தெரிகிறது..
உந்தன் முகமே தெரிந்துவிட்டால்..
நிலவு வானில் மறைகிறது!!
நான் தவிக்கின்றேன்..
விண்ணில்..
உனையடைய துடிக்கின்றேன்..
சிறகை கேட்கின்றேன்..
சிறகடித்து செல்ல விழைகின்றேன்!!
தடை எதிர்த்து..
படை தொடுத்து..
பகை எதிர்க்கின்றேன்..
உன் சுவாசம் வீசும் தோட்டத்திலே..
வாசப்பூவாய் பூக்கின்றேன்!!!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment