பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 22, 2010

பித்தன்



கவிதைகளாய்...
எழுதி எழுதி..
காவியம் பாடவா காதல்???

விழியில் விழுந்தாய்...
விண்மீனாய்..
உளியால் சிதைத்ததேனோ???
வலியோடு!!!

காரணமின்றி பிறந்த..
மனவிருந்து என்றிருந்தேன்..
காதலை!!!
காயப்படுத்தி சென்றுவிட்டாய்..
உன் மனமுவந்து!!!

பிணமாக்கி தந்தாய்..
காதலை..
இன்றும்-
வாழ்வித்துக்கொண்டுதான் இருக்கிறது..
ரணமாகிப் போன என் மனம்!!

என்ன செய்ய??
கலைகின்ற மேகம்..
வானுக்கு சொந்தம்!
கரை சேரா அலைகள்..
கடலுக்கே சொந்தம்!!
உறவோ பிரிவோ..
நீயே என் பந்தம்!!

விலகி நீ சென்றாலும்...
மனம் மறக்கவில்லை..
உன்னிடமிருந்து விலக!!
என் நினைவுகளுக்கு..
வேலியாய் நீ!!

இனி இம்சிக்க..
நீ இல்லை!
உன்னை பழி சொல்ல..
மனமில்லை!
புலம்புவதில் நியாயமில்லை!!

என்னதான்...
ஏமாற்றங்கள் ஏணிகளானாலும்..
என் கால்த்தடம் பதித்த..
அந்த ஏணிப்படிகள்..
நீதானே!!

விதியின் எழிலொன்றை பார்த்தாயா??
நம் காதல் பிறந்த இந்நாளில்..
நான் வடிக்கும் பிரிவினை..
உலகோடு நீயும் 
படிக்கின்ற கோலம்!!
தண்டனை என்று மட்டும்..
எண்ணிடாதே..
சுருங்கிய உயிர் மடிந்திடும்!!!

எத்தன் என்று..
எனை புவி பழித்தாலும்..
என்றும்-
நான் உன் பித்தன் என்பதை..
நீ அறிவாயா?? :) 

No comments:

Post a Comment