பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 15, 2010

அன்பின் நெஞ்சம்







இதழிலே ஒரு புன்னகை..
நீ ஏழை இல்லை..
ஆனால்-
இறைவனை காண்கின்றோம்!
கன்னங்களில் நீ..

இதழ் பதித்தால்..
கண்ணீராய் கரைந்திடும்..
எங்கள் கவலைகள்!


பட்டாம்பூச்சி ஆட்டம் ஆடிடும்
மனது..
உன் குழந்தை வயது!
பொய்யும்.. மெய்யும்..
மழல்வாய் அமுதம்..
கேட்டுக்கொண்டே..
உள்ளம் ரசித்திடும்..
நித்தம்..நித்தம்!

உலகம் மறப்பான்..
மனிதன் உன்னால்!
கடமைகள் செய்வான் ..
உனக்கு எல்லாமே..
நன்னாள்!

கையில் உன்னை..
ஏந்தி கொண்டால்..
அன்னை மனம் பெற்றிடுவோம்!
அன்பின் நெஞ்சம் நீ..
அதுதான்-
கடவுள் என்று நம்பிடுவோம்!

No comments:

Post a Comment