ஊர் கூடித்தேர்
இழுப்பது...
நம் மண்ணில்..
தொன்றுதொட்டு..
நிகழும்..
வழக்கமனாது!
மனிதர் யாவரும்..
சமம்..
ஒற்றுமையோடு..
அனைவரும்
இழுத்தால்தான்..
தேர் சிறப்பாக..
பவனி வரும்!
அங்கயற்கண்ணி
அசைந்தாடி வரும்
தேரும்..
அப்படியே!!
மதுரை மண்ணின்..
மைந்தர் அனைவரும்..
ஒற்றுமை ஓங்க..
சொக்கரின் துதி
பாடி..
நீள வடம் பிடித்து...
பக்தியுடன்..
தேரிழுப்பது..
பண்பாட்டின் கலைகளின்..
அடையாளம்!
அரியநாத முதலியார்
வடிவமைத்த..
பதினாறாம் நூற்றாண்டு
தேர்மண்டபம்!
இன்றோ-
நாம் தரிசித்து..
பூசிப்பது..
ராணி மங்கம்மாள்
வம்சாவழி பேரனான..
விஜயரெங்க
சொக்கநாத நாயக்கர்..
வடிவித்த..
பதினெட்டாம் நூற்றாண்டு..
தேர்மண்டபம்!
சிவபுராணங்கள்..
திருவிளையாடல்
சிற்பங்கள்..
இரு தேர்களிலும்..
அடக்கம்..
அழகுற!



No comments:
Post a Comment