பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 18, 2011

மிச்சமில்லாமல்,,,

உனை பழித்து..
என்ன பயன்?
மடிந்தவனுக்கு..
மறுபிறவி வேண்டாம்...
மீண்டும் அழிவினை காண!

உன் இயற்கைதானே
இதுவும்..
எச்சரிக்கை மணி..
ஒலிக்காமல்..
எமனின்..
இன்னொரு தூதுவன்!!

அன்று..
நெகிழ்ச்சியில்..
உனை கொண்டாடிய மனம்...
இன்று...
மிரட்சியில்...
உன் ஆர்பரிப்பால்!!
அன்னை என்றெண்ணி..
வணங்கும் உன் செல்வங்களை..
நீயே பறித்தது ஏனோ?

கோபம் என்பது..
உனக்கும் உண்டென்றால்..
மீண்டும் உனை..
அடையாளம் கொள்...
போரிடுவோம்..
துணிந்து உன்னிடம்..
அச்சமில்லாமல்!!

நாங்கள்..
தோல்விகண்டால்...
பிரபஞ்சத்தை
தழுவிக்கொள்...
மனித மெத்தனங்கள்..
மூழ்கி மடியட்டும்..
மிச்சமில்லாமல்!!!

3 comments:

  1. Its really good ... touching... :) :)

    ReplyDelete
    Replies
    1. Thank you... But remember we are witnessing our 'end of days'!!

      Delete
  2. Thank you... But remember we are witnessing our 'end of days'!!

    ReplyDelete