நிஜம் அழிந்த பிறகு..
நிழலும் ஒரு..
மண்ணில் மழைத்துளி..
மடிவது போல்..
உன் ஒவ்வொரு..
நினைவிலும்..
வாழ்வில் ஒடிகின்றேன்!
கண்ணீரும் இல்லை..
ஆனாலும்-
கண்ணாடியில் தெரிவது...
என் உடைந்த முகமோ..
மரத்த மனமோ?
நேசித்த ஓர் உயிர்..
என் முன்னே தொலைகிறது..
ஞாபகங்கள்..
ஒன்றா..இரண்டா..
மனம் தொலைந்த பின்னும்..
என் உயிர்வரை..
தொடர்கிறது!!
இது..
காயமழை!
நனையவிட்டால்..
இதயம் சிதையும்..
ஆயுள்வரை!




No comments:
Post a Comment