பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Sep 5, 2012

இறு'தீ' அஞ்சலி!!!



அலட்சியங்களின்
ஆபத்து..
விபத்து!!

கண்டவனும்..
கருகினான்!
காக்க சென்றவனும்..
பொசுங்கினான்!!

விபரீதங்களோடு..
தினம் தினம் தெரியாமல்..
விளையாடிய உயிர்கள்..
இன்று மயானங்களில்..
கனவுகள் கருகி!

பல இல்லங்களிலும்..
உள்ளங்களிலும்..
தீபஒளி ஏற்ற..
பணிபுரிந்தவன் இல்லத்தில்..
இன்று-
அகல்விளக்கில்..
மரணஒளி ஏற்றி..
இறுதி அஞ்சலி!

நிலை மாறினாலும்..
உலகில்-
உயிர் விலை மாறாது!!

உணவே மருந்தென்ற
நிலை மாறி..
மருந்தில் வேலை செய்தாலே..
ஒரு வேளை உணவென்று வாழ்ந்த..
அறியாமை ஜீவன்களுக்கு..
வெடிமருந்தே..
உயிர்கொல்லியானது!!

நிதிகளை கவனிக்கும்..
தொழில் வளாகங்கள்..
நிதியுதவி கொழிக்கும்..
அரசாங்கங்கள்..
விதிகளுக்கு..
தோள் கொடுக்க..
அடிக்கடி மறப்பது ஏனோ??

No comments:

Post a Comment