பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 31, 2010

கவிதை பாடிட வா...

புத்தாண்டே...
ஒவ்வொரு ஆண்டும்...
மலர்வாய்...
மெல்ல வளர்வாய்..
புது மனிதரோடு..
புதுமை மனங்களோடு!


விடியலில் கூட...
இருளாய்..
ஒரு கனவாய்..
விளங்கும் கல்வியினை..
பிஞ்சுகளுக்கு..
நனவாய்..
சற்று மலிவாய்..
நீ அருள்வாய்.!



நியாயங்கள் நிலைக்காத..
நன்னாட்டில்..
பாவங்கள் இழைக்காத...
சந்தர்ப்பங்கள் பல..
நீ தருவாய்!





கல்வி சான்றிதழ் முதல்..

மணமக்கள் வாழ்விதழ் வரை..

சாதிகள் வேண்டாம் என..

கோடிடுவாய்!!!


அகிலம் விளையாடும்..
கோப்பை ஒன்றிக்கு..
இருபத்திரண்டு ஆண்டுங்கள்..
பந்தாடிடும்...
மாய மனிதர்க்கு..
மகுடஞ்சூட்டி...
அன்னைபூமி மண்ணில்..
கோடானகோடி நெஞ்சில்..
ஆனந்த மழை..
நீ பொழிவாய்!


விஞ்ஞானம் வளர்ந்த உலகில்..
இன்னும் வளராத சில..
மனித பதர்களையும்...
வளர செய்வாய்!!
 
விதிகளை மீறும் நல்லோர்க்கு..
விதி ஒன்றை..
நீ காட்டிட வா!!!

தூக்கம் தொலைத்த விழிகளுக்கு...
ஊக்கம் கொடு..
உன் வரவில்!!

ஒவ்வொரு இம்மையிலும்...
ஒரு நன்மை என்று..
மதிகெட்ட மானுடனை..
பழக்கிட வா!!

தேயும் முழுபிறையாய்
இருக்கட்டும் இனி மோதல்..
வளரும் தேய்பிறையாய்..
வாழட்டும் காதல் என்று..
கவிதை பாடிட..
புத்தாண்டே வா வா...

2 comments: