உலகில் எம்மொழி..
செவி கேட்கும் செம்மொழி...
எங்கள் தமிழ்மொழி!
எழுத்துக்கள் அணிவகுக்கும் அழகாய்...
எம்மெய்யில் உயிராய்...
உயிரில் உண்மையாய்...
எம் உரிமையாய்...உயிர்மெய்யாய்!!!
உயிரோடு மெய் சேர்ந்த எழுத்துக்கள்..
இனம் பெருக்கும்...
வல்லினமாய்...
இடையினமாய்..
மெல்லினமாய்!
இவையெல்லாம் காக்கும்...
காவல் தெய்வமாய் ஒற்றை எழுத்து...
அஃது ஆயுத எழுத்து!
சங்கம் அமைத்து
தமிழ் வளர்த்த காலத்திலும் சரி..
பிறமொழி புகுந்தும்..
நீடிக்கும் நிகழ்காலத்திலும் சரி...
எந்த கலிகாலத்திலும் சரி...
தமிழ் - தமிழனின் அபிமானம்..
தமிழ் எழுத்தே தமிழின் அடையாளம்!!!


No comments:
Post a Comment