பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Nov 20, 2010

கருவறையில்!

நேற்றோருநாள்..
இருளில் இருந்தேன்..
அழகாய் தெரிந்தேன்!
புதியதாய்..
புன்னகைத்தேன்!
காயங்கள் மறந்தேன்..
கண்ணயர்ந்தேன்..
கவலை இல்லாமல்!
ஒருநாள்முகம் அணிந்தேன்..
ஒரேயொரு நாள்..
எவருக்கும் தெரியாமல்..
மீண்டும்...
கருவறையில்!